சித்திரை மாதம் 21.2021 இன்றைய நாள் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
08 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,000 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய காரணங்களினால் இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.













0 Comments
No Comments Here ..