19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம்- யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.


 இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவினருடன் இணைந்து இன்றைய தினம் அரச அதிபர் தலைமையில் ஒரு விசேட கொரோனா ஒழிப்பு தொடர்பான கூட்டத்தை கூட்டி இருந்தோம்


 தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கோவிட் நோயினை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல் அதேபோல் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல். வடக்கு மாகாணத்தில் covid-19 கட்டுப்பாட்டினை எவ்வாறு பேணுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராய்ந்த்தோடு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பிலும் ஆராய்ந்தோம் 

அத்தோடு விசேடமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மக்களை எவ்வாறு இந்த நோயிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் ஆராய்ந்தோம் அத்தோடு எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

 விசேடமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு சுகாதார பரிசோதகர்கள் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு ஏற்றவாறாக பொது சுகாதார பரிசோதகர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்

பொது சந்தை,வியாபார நிலையங்கள், மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் பொதுமக்களின் ஒன்றுகூடல் களை கட்டுப்படுத்த உரிய செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம் என தெரிவித்தார்.




அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவோம்- யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு