கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் நிர்வாகிகள், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் தடைசெய்யப்பட்ட உள்நாட்டு தொழில் முறைகளை தடுத்தல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், மீனவர்களுக்கு அறிவிக்கப்படும் கடன் வசதிகளை பயனாளர்களுக்கு வழங்குவதை இலகுபடுத்துவதற்கான வழிவகைகள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
0 Comments
No Comments Here ..