இலங்கையில் நாளொன்றில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 ஐ விட அதிகரிக்கக் கூடும் என்று சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
தற்போது நாடளாவிய ரீதியில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையால் மாவட்டங்களிலுள் வைத்தியசாலைகளிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரிவுகளை பிரத்தியேகமாக ஒதுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு சுமார் 1200 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே நாட்டை ஒரு வாரமாவது முடக்குங்கள் என்றும் பொதுச் சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.













0 Comments
No Comments Here ..