21,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

14 துவிச்சக்கர வண்டிகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாண நகர பகுதியில் நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தின் பிடியாணை உள்ள நிலையில் அவர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது அவரது வீட்டிலிருந்து 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான துவிச்சக்கரவண்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முற்படுத்தபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




14 துவிச்சக்கர வண்டிகளுடன் ஒருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு