முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கணுக்கேணியினை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்று கொவிட் 19 காரணமாக நிறுவனத்தினை பூட்டிவிட்டு பணியாட்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்கள் இன்னிலையில் கணுக்கேணி கிழக்கினை சேர்ந்த 45 அகவையுடைய குறித்த குடும்பஸ்தர் கடந்த 07 ஆம் திகதி வீட்டிற்கு வந்து தனிமைப்பட்டு இருந்துள்ளார்.
இருந்தும் சந்தேகத்தில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பி.சி.ஆர் பரிசோதனையினை கடந்த 08.05.21 அன்று செய்துள்ளார் அதன்முடிவு 10.05.21 அன்று வெளியாகியுள்ளது.
கொவிட் தொற்றுக்கு இலக்கான குறித்த குடும்பஸ்தர் மாங்குளம் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..