ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட் வழங்குவது பற்றி அந்நிறுவன ஊழியர் பதில் அளித்துள்ளார்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது இந்த மாடல்களில் 5ஜி SA/NSA பேண்ட்கள், N41 மற்றும் N78 வசதி இருப்பதாக ஒன்பிளஸ் அறிவித்தது.
அதன்பின் வெளியான தகவல்களில் ஒடிஏ அப்டேட் மூலம் இரு மாடல்களுக்கும் கூடுதலாக 5ஜி பேண்ட்களின் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இந்த தகவல்களில் உண்மையில்லை என ஒன்பிளஸ் ஊழியர் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்காலத்தில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுக்கு கூடுதலாக 5ஜி பேண்ட்களுக்கான வசதி அப்டேட் மூலம் வழங்கப்படாது என அவர் தெரிவித்து இருக்கிறார்.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..