நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..