10,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.


அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது\

. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்

.

இரண்டு வார தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.


லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்





இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு