கோடைக்காலத்தில் உங்கள் தலைமுடியை பாதுகாக்கவும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் இதை செய்து பாருங்கள்.
தயிர் மாஸ்க்;
கோடைக் காலத்திலும் பொடுகு பிரச்னை வரத்தான் செய்கிறது. அதுவும் குறிப்பாக நமது வேர்களில் அதிக வியர்வை அல்லது, எண்ணை கசிந்தால், பொடுகு மற்றும் அரிப்பும் வர வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு எளிதான வழி என்னவென்றால் தயிரை உச்சி மண்டையில் மெதுவாக தடவவேண்டும். அதுவும் தயிரில் உள்ள லாக்டிக் அமிலமானது பொடுகை நீக்குவது மட்டுமல்லாது, நம் உடலுக்கும் குளிர்ச்சி அளிக்கிறது. இரசாயன ஷாம்பூகளை பயன்படுத்துவதைக் காட்டிலும், இதுபோல வாரம் ஒரு முறை செய்து, பிறகு குளித்தால் cool ஆக இருக்கும்.
கற்றாழை மாஸ்க்;
சூரி ஒளியில் இருந்து , நமது கூந்தலின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும். விளைவு உலர்ந்த கூந்தலும், முடி வெடிப்பும் தான் . இதற்கு நல்ல தீர்வு கற்றாழை. அதில் உள்ள நீர் சத்தானது கூந்தல் புற்றுயிர் பெற உதவும் . அது மட்டுமல்லாது தலையில் ஏற்படும் சூடு கட்டிகளுக்கும் கற்றாழை ஒரு அருமருந்து. அவ்வப்போது உச்சியிலிருந்து, முடியின் வேர்கள் வரை கற்றாழை கூழை தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் வறண்டு போகாமல் ஊட்டமாக இருக்கும்.
சுத்தமான கூந்தலில், ஒரு முட்டை, தலா ஒரு தேக்கரண்டி இந்த எண்ணைகளும் சேர்த்து நன்றாக அடித்து, தலையில் ஒரு 30 நிமிடங்கள் ஊறிய பிறகு, ஒரு மைல்ட் ஷாம்பூ கொண்டு குளித்தால் கூந்தல் அடர்த்தியாக, பளபளவென மிளிரும்.
மேலும் ஒரு டிப் என்னவென்றால், குளிக்கும் போது சிறிது பன்னீர் சேர்த்து குளித்தால், முட்டையிலிருந்து வரும் சிக்கு வாடை குறையும்.
ஷாம்பூவிற்கு பதில்
கோடைகாலத்தில் நாம் அடிக்கடி தலை குளிக்க நேரும். அதனை தவிர்க்க இயலாவிட்டாலும், ஷாம்பூவிற்கு பதில் நாம் ஆப்பிள் சிடார் வினிகர் பயன் படுத்தலாம். ஒரு பங்கு வினிகருடன், இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து, ஷாம்பூவிற்கு பதிலாக பயன்படுத்தினால், நம் முடியில் சேர்ந்திருக்கும் எண்ணையை போக்கும், அதே நேரம் கூந்தல் உலர்ந்து போகாமலும் காக்கும்.
0 Comments
No Comments Here ..