24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப்பெட்டி மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் தீக்கிரையான எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் இந்த கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாகவும் அதனை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இந்தக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடல் பரப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்த கப்பலின் 20 பணியாளர்களிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.


கப்பல் விபத்து தொடர்பான முக்கிய விபரங்களை இந்த கறுப்பு பெட்டியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது




தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கறுப்புப்பெட்டி மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு