24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மூங்கிலாறு சிவன் ஆலயத்திலிருந்த பிள்ளையார் மாயம்!!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் சிலை உடைத்து திருடப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் முறைப்பாட்டினை பதிவு செய்ய மறுத்ததாக ஆலய நிர்வாக தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.


மூங்கிலாறு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் பிள்ளையார் சிலை இல்லாத காரணத்தினால் பிள்ளையார் சிலை ஒன்றை நிறுவி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.


இதனை தொடர்ந்து கடந்த 03ஆம் திகதி அன்று ஆலய குருவை நித்திய பூசை செய்ய வேண்டாம் எனவும் ஆலயத்தை தொடர்ந்து பராமரித்து வரும் அயலவர்களை கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரித்த நிலையில் அன்று இரவே சிலை காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய முயற்சித்தபோது பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யாது திருப்பி அனுப்பியதாக ஆலய நிர்வாக தலைவர் தெரிவித்துள்ளா




மூங்கிலாறு சிவன் ஆலயத்திலிருந்த பிள்ளையார் மாயம்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு