அவிசாவெல்லையில் கோவிட் உடன் 180 க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் அவிசாவெல்லையில் 187 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த காலகட்டத்தில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 589 பேர் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டனர்.
இதேவேளை இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில் மொத்தம் 2,976 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.













0 Comments
No Comments Here ..