தனியார் மருந்தகங்களின் ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மருந்தகங்கள் மூடப்பட வேண்டியிருக்கும் என்று அனைத்து இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடக செயலாளர் சித்தத் சுரங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் நோயாளிகளின் உறவினர்கள் கூட மருந்தகங்களில் பணிபுரிவதால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டாலும், இதுவரை எந்தவொரு சாதகமானபதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கொவிட் தொற்று காரணமாக ஒரு மருந்தக உரிமையாளர் இறந்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் கூட மருந்தகங்களைத் திறந்து வைத்திருக்கும் மருந்தகங்களின் ஊழியர்கள் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..