20,Apr 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

தமிழ் மக்கள் மீதான ராஜபக்சர்களின் பார்வை!! இனியாவது திறக்கப்படுமா கண்கள்?

இனவாதத்தில் மூழ்கியிருக்கும் ராஜபக்சாக்கள் போர் காலத்தில் தமிழ்மக்கள் மீது எப்படி அக்கறை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இனியாவது சிங்கள மக்களின் கண்கள் திறக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொன்னகர், பல்லவராஜன் கட்டு, முட்கொம்பன் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உலருணவு பொதிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு மக்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் சட்ட ஆலோசகர் என். காண்டீபன் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். 





தமிழ் மக்கள் மீதான ராஜபக்சர்களின் பார்வை!! இனியாவது திறக்கப்படுமா கண்கள்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு