14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் கோவிட் தடுப்பூசிகள்!

யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் தடுப்பூசி அளவுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு கடந்த மே மாத இறுதியில் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவு ரீதியில் சினோபார்ம் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டது.

அவ்வாறு முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியை பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகும் என பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதானந்தன் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக சுகாதார அமைச்சினால் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்





யாழ். மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரம் கோவிட் தடுப்பூசிகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு