கடந்த 24 மணிநேரப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 45,532 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று கைதானவர்களில் அதிகளவான கைதுகள் கண்டியில் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை நேற்று கொழும்புக்கான 14 நுழைவாயில்களில் 3,200 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவற்றில் 59 வாகனங்கள் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி முயற்சித்தமைக்காக திருப்பி அனுப்பப்பட்டன.













0 Comments
No Comments Here ..