இலங்கை கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரே காரணம் என 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த, முன்னாள் அணித் தலைவர், அர்ஜுன ரணதுங்க பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இயங்கும் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறித்த நேர்காணலில் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
இரண்டாம் நிலை தலைவர்களை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஏற்படுத்தவில்லை - அவர்கள் தங்களது சாதனைகளை மாத்திரமே நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.
சித்தப்பா ஜனாதிபதியாகவும், தந்தை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்த முடியாவிட்டால் வேறு எவராலும் இயலாது.
எனினும் நாமல் ராஜபக்ஷ இந்த விடயத்தில் தோல்வி அடைந்துள்ளார் என அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..