இரத்தினபுரி - கஹெங்கம கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 27ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ள குறித்த கிராம மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு வசிக்கும் 125 குடும்பங்களும் நேற்று தமக்கு நிவாரணம் வழங்கக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருமானத்தை இழந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளுக்கு உணவளிக்க கூட முடியாததால் 5,000 கொடுப்பனவையாவது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
“நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்கள் குழந்தைகள் உணவுக்காக அழுகிறார்கள். அதனால்தான் இன்று நாங்கள் வீதிக்கு வந்தோம்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணம் எங்களுக்கு வழங்கப்பட்டால், நாங்கள் சுகாதார வழிகாட்டுதல்களையும், தனிமைப்படுத்தலையும் வீட்டிலேயே கடைப்பிடிப்போம், ”என்று கூறினர்.
0 Comments
No Comments Here ..