01,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல்! இளம் பெண் உட்பட இருவர் கைது

ஜா-எல, கொட்டுகொட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 1.225 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சம்பாதித்த 8லட்சத்து 68,900 ரூபா பணமும் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 26 வயதுடைய பெண்ணொருவரும், 29 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பொரளை மற்றும் கட்டுவான பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அதிரடி செயல்! இளம் பெண் உட்பட இருவர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு