19,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ராஜபக்ச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்!

"ஆசிரியர் சமூகத்துக்கு ராஜபக்ச அரசு அநீதி இழைத்துள்ளது.இந்த அநீதிக்கு எதிராகவே நாம் வெகுண்டெழுந்துள்ளோம்.

அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு முழுவதிலும் மாபெரும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம்.

அதேவேளை, நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாட்டைப் புறக்கணிக்கும் ஆசிரியர் சமூகத்தின் போராட்டமும் தொடரும்." - இவ்வாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாட்டிலிருந்து விலகி இன்றுடன் 10 நாட்களாகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தை இடைநிறுத்தாது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அதேவேளை, எமக்கு நீதி கோரி நாடு முழுவதிலும் வீதியில் இறங்கிப் போராடுவோம். கொரோனாத் தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்குக் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசு எவ்வித வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.





ராஜபக்ச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு