காலி – ஊருகஸ்மங்ஹந்திய – தேவத்த பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார், 25 வயது இளைஞர் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததாகவும் இதில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..