07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

கொவிட் தொற்று சடுதியாக அதிகரிப்பு - சுகாதார தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா நோய்த்தொற்றுகள் மீண்டும் உயர்வடைவதாக சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,056 ஆகும். இது கடந்த 17 ஆம் திகதி முதல் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகும்.

இதன்படி அதே நாளில் 1,452 பேரும், 18 ஆம் திகதி 1,420 பேரும், 19 ஆம் திகதி 1,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் நாட்டில் நாளொன்றுக்கு 1,500 க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன,

20 ஆம் திகதி 1,554 பேரும், 21 ஆம் திகதி 1,604 பேரும், 22 ஆம் திகதி 1,724 பேரும், 23 ஆம் திகதி 1,815 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு திறக்கப்பட்டதிலிருந்து கொவிட் தொற்றுநோய்களின் எண்ணிக்கை கூர்மையாக அதிகரிப்பது கடுமையான பிரச்சினையாக உள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 





கொவிட் தொற்று சடுதியாக அதிகரிப்பு - சுகாதார தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு