17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பெண்களை காப்பாற்றச் சென்று பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் அகதி!

தமிழ் நாட்டில் நெல்லை கோபாலசமுத்திரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில், 52 வயதுடைய சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் கோழி பண்ணையில் வேலை செய்து வந்தார்.

அவர் திசையன்விளை எம்.ஜி.ஆர். பஸ் நிறுத்தும் இடத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் பெண்கள் சிலர் வீதியை கடந்து உள்ளனர்.

அவர்கள் மீது மோதாமல் இருக்க சந்திரன் திடீரென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த போதும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து திசையன்விளை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 





பெண்களை காப்பாற்றச் சென்று பரிதாபமாக உயிரிழந்த இலங்கைத் தமிழ் அகதி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு