24,Jan 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்திலும் கொவிட் பலி அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக் கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும், கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192ஆக உயர்வடைந்துள்ளது.





யாழ்ப்பாணத்திலும் கொவிட் பலி அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு