07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 70 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 64647ஆக உயர்வடைந்துள்ளது.

அதேபோன்று மேல் மாகாணத்துக்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் 13 இடங்களில் நேற்று 1335 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 1959 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.





தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு