17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றாளர்கள் உயிரிழக்க இதுதான் காரணம்! யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தகவல்

கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது.

குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும்.

இவ்வாறு சில நாட்கள் தாமதித்து வருவதினால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கொரோனா தொற்றாளர்கள் உயிரிழக்க இதுதான் காரணம்! யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு