18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

சீன நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு திடீரென கடிதம் எழுதிய ஸ்ரீலங்கா அரச அதிபர்

சீனாவின் சைனோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.

சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சைனோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சைனோபார்ம் நிறுவன தலைவர், சைனோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்தார்.





சீன நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு திடீரென கடிதம் எழுதிய ஸ்ரீலங்கா அரச அதிபர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு