26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வயதெல்லையை தீர்மானிக்கும் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று

பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


முன்பள்ளி முதல் தரம் 6 வரையிலா அல்லது 12 - 13 வரையான மாணவர்களுக்கா? தடுப்பூசி வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பிரச்சினை உள்ளது. 12 - 18 மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்க இலங்கை வைத்திய சங்கம் அனுமதித்தாலும்,

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசியால் ஏதொவொரு தாக்கநிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற உலக நிலைமைகளை கருத்திற்கொண்டே நாமும் செயற்பட வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதையடுத்தே தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் முக்கிய கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





வயதெல்லையை தீர்மானிக்கும் மிக முக்கிய கலந்துரையாடல் இன்று

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு