ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கான வாக்களிப்பின் போது இம்முறை பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வில் வாய்மூல அறிக்கையை முன்வைத்த மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விடயங்களை முன்வைத்தார்.
அதன் மீதான விவாதத்தில் கலந்துகொண்டுள்ள பல்வேறு நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இம்முறை அமர்வில் உரையாற்றிய ஜப்பானின் வதிவிட பிரதிநிதி..
இலங்கைக்கு தேசிய நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை போன்ற விடயங்களை மேம்படுத்த சந்தர்ப்பம் உள்ளதாகவும் அரசாங்கம் விசாரணை ஆணைக்குழு மூலம் விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..