29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பற்றச் சென்ற இளைஞனும் பலி! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

ஹட்டன் - நோட்டன் பிரிட்ச் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லொனெக் மீனாட்சி பிரிவைச் சேர்ந்த சின்னையா ராஜா (வயது-36) என்ற இரண்டு பிள்ளையின் தந்தை மற்றும் நபர் சிலாபம் பகுதியிலிருந்து வேலைக்காக வருகை தந்த சச்சிந்த தில்ஷான் (வயது -21) ஆகியோரு இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், 

லொனெக் பகுதியில் அபிவிருத்தி பணியில் ஈடுப்பட்டிருந்த நிலையில் பணியினை முடித்து விட்டு குளிப்பதற்காக குறித்த குளத்திற்கு உயிரிழந்த இருவருடன் மேலும் இரண்டு பேர் சென்றுள்ளனர்.

அப்போது ராஜா என்ற நபர் முதலில் குளத்தில் குதித்துள்ளார். அவர் நீரில் மூழ்குவதனை கண்ட அவரது நண்பர் தில்ஷான் அவரை காப்பாற்றுவதற்காக குதித்த போதே இருவரும் நீரில் மூழ்கியதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளன.

மேலும் இருவரையும் பிரதேசவாசிகள் தேடும் பணியில் ஈடுப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. தேடும் பணிகளை மேற்கொண்ட சுழியோடிகள் குறித்த இருவரின் சடலங்களை இன்று காலை மீட்டுள்ளனர்.

இருவரின் சடலங்கள் வைத்திய உடல்கூற்றுப் பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 





குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பற்றச் சென்ற இளைஞனும் பலி! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு