19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அநுராதபுரத்தில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அநுராதபுரம் - ஹொரவ்பொத்தான குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

ஹொரவ்பொத்தான - கம்மெத்த கம்மானய பகுதியைச் சேர்ந்த ரன்ஹாமிகே வணிகசேகர (62 வயது) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த நபர் இக்குளத்தில் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், சில நேரங்களில் மது அருந்துவதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 





அநுராதபுரத்தில் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு