இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalenthiran) வீட்க்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாலசுந்தரம் என்ற இளைஞனின் தாய், சர்வதேச தலையீட்டுடன் ஒரு நீதியான விசாரணை வேண்டுமென கோரியுள்ளார்.
படுகொலை தொடர்பான வழக்கு இன்று இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த ஜூன் மாதம் 21 ம் திகதி 34 வயது மதிக்கத்தக்க பாலசுந்தரம்(Balasuntharam) எனும் இளைஞன் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி இ.தியாகேஷ்வரன்(E.Thiyaheshwaran) முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
0 Comments
No Comments Here ..