கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழில் விடுதியை நடத்தி சென்ற இருவர், அதற்கு உடந்தையாக இருந்த நான்கு பெண்கள் உள்ளடங்களாக அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு, எப்பாவல, அநுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவௌ மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுகளையுடைய அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..