18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவில் மீண்டும் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - ஒருவர் மரணம்

வவுனியாவில் 24 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்தவர்களின் பீசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில (07.10) இரவு வெளியாகின.


அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 24 பேருக்கு மேலும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில், தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், கோவிட் தொற்று காரணமாக வவுனியாவில் இன்று (07.10) செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த (வயது 63) ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளார்





வவுனியாவில் மீண்டும் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - ஒருவர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு