20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

''ஆய்வுகூட எலிகளாக மாற்றப்பட்டுள்ள இலங்கையர்கள்''

இலங்கை மக்கள் ஆய்வு கூட எலிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

பயிலுனர் ஜனாதிபதி ஒருவர் ஆட்சியை நடாத்துவதாகவும், ஒட்டுமொத்த அரசாங்கமும் கோமாளிக் கூத்து ஆடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனக்கு அனுபவம் இல்லை எனக் கூறும் ஜனாதிபதி, ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பரிசோதனை கூட எலிகளைப் போன்று, அனுபவம் பெற்றுக்கொள்ள பயன்படுத்துகின்றார் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியை நிறுவுவதற்கு தோள் கொடுத்த அனைத்து தலைவர்களும் இந்த அநீதிக்கு பொறுப்பு கூற வேண்டுமென தெரிவித்துள்ளார்.





''ஆய்வுகூட எலிகளாக மாற்றப்பட்டுள்ள இலங்கையர்கள்''

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு