17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, அக்டோபர் 16ஆம் திகதியுடன் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், அக்டோபர் முதலாம் திகதியுடன் நீக்கப்பட்டதையடுத்து அக்டோபர் மாதத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகளை இரு கட்டங்களின் கீழ் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி சுகாதார அமைச்சு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மாகாணங்களுக்கு இடையே அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் அக்டோபர் 21 வரை அல்லது இம்மாத இறுதி வரை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான தளர்வுகளுடன் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





இலங்கையில் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு