05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பாடசாலைகளிலிருந்து இடை விலகிய மாணவர்கள் தங்களுக்குரிய பைசர் தடுப்பூசிகளை சனி, ஞாயிறு தினங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை. அவ்வாறு யாராவது பணம் கோரினால் முறைப்பாடு செய்யுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கில் சில இடங்களில் பாடசாலையை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு பணம் கோரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.








பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு