இலங்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறி 400 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அந்த வாகனங்களை அரசுடமையாக்குவதா இல்லையா என்பது தொடர்பில் தகவல் கோர இலங்கை சுங்க பிரிவு, நிதி அமைச்சிடம் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் அரசாங்கத்தினால் வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டமையினால் அது சட்டத்தை மீறி செய்யப்பட்ட செயல் என சுங்க திணைக்களம் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகத்தில் அதிக சொகுசு வாகனங்கள் 3000க்கும் அதிகளவில் உள்ளதென சுங்க ஊடக பிரிவு பேச்சாளர் சுதந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..