வடகிழக்கில் அரசியல் செய்வதைப் போல புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது.என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம்(Ali Sabri Raheem) தெரிவித்துள்ளார்.
2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை மற்றும் அ.இ.ம.கா கட்சியால் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடத்திய விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால் கட்சியிலிருந்து என்னை இடைநிறுத்தியுள்ளதாக வாட்சப் மூலம் அறிவித்தார்கள் எனினும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை
அவ்வாறு எழுத்து மூலம் அறிவித்து ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தால் 2022 வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஏன் வாக்களித்தேன் என்று எனது பக்க நியாயங்களை தெளிவுபடுத்துவேன்.












0 Comments
No Comments Here ..