யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிச் செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ்வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிப் பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..