யாழ்ப்பாணத்தில் பட்டத்துடன் இழுத்துச் செல்லப்பட்ட மனோகரன் என்ற இளைஞனுக்கு முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் பட்டம் ஒன்றை பறக்க விட்டபோது குறித்த இளைஞன் பட்டத்துடன் 120 அடிக்கும் மேலும் பட்டத்துடன் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.
120 அடிக்கும் மேல் உயர இழுத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞன் முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியிருந்தார்.
அத்துடன் சம்பவத்தை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சை பெற்று தனது விருப்பத்தின் பேரில் வீடு திரும்பியுள்ளார்.
0 Comments
No Comments Here ..