அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவதாக ஜனாதிபதியோ அல்லது வேறு எந்தவொரு நபரோ அறிவிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கான எதிர்பார்ப்பு தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் தாம் உட்பட அமைச்சர்களான வாசு தேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பாராயின் எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..