03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாணவி

குருநாகல் - தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையின் 6ம் தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

 நாத்தாண்டிய − தப்போவ பகுதியைச் சேர்ந்த B.M.T.மனிஷா குமாரி பெர்ணான்டோ என்ற மாணவியே, நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ம் திகதி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த மாணவி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார். 








கொரோனா தொற்றால் உயிரிழந்த மாணவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு