மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.
” இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (பெப்.22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப பெண்ணே கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை காவல் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அதனடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
0 Comments
No Comments Here ..