17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இளைஞர் குழுக்களுக்கிடையில் அடிதடி!! கலவர பூமியான வைரவபுளியங்குளம்

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும் பிறிதொரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற மோதலால் வவுனியா வைரவபுளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதி கலவரபூமியாக மாறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த இரு தினங்களாக இளைஞர் குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்றுவந்தது.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர்.

இதனையடுத்து அந்தப்பகுதிக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், தனது சகாக்களுடன் சென்றிருந்தார்.

இதன்போது இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டதுடன், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதேவேளை சற்றுநேரத்தில் குறித்த பகுதிக்கு வந்திறங்கிய மற்றொரு குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினருடன் வருகைதந்திருந்த சகாக்களை தாக்கத்தொடங்கினர், அவர்களும் திருப்பித்தாக்கினர்.





இளைஞர் குழுக்களுக்கிடையில் அடிதடி!! கலவர பூமியான வைரவபுளியங்குளம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு