08,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

அச்சுவேலி வல்லைப்பகுதியில் வாகனம் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அச்சுவேலி, வல்லை, பருத்தித்துறை பிரதான வீதியில் நேற்று காலை வீட்டுக்கு முன்னாள் குடும்பஸ்தர் ஒருவர் புற்களை பிடுங்கிக்கொண்டிருந்துள்ளார். 

அப்போது வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வந்த கெப் ரக வாகனம் அந்த நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். 

அத்தோடு, அருகில் இருந்த மற்றொருவரும் விபத்தில் காயமடைந்துள்ளார். 


குறித்த வாகனம் நபரின் மீது மோதியதுடன், அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளது. 

உயிரிழந்தவர் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதான நபர் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது எனவும், வாகனத்தை செலுத்திய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.





அச்சுவேலி வல்லைப்பகுதியில் வாகனம் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு