17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி பலி

இந்த சம்பவம் கிளிநொச்சி ஏ -9 வீதி உமையாள்புரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில்  மூன்று பிள்ளைகளின் தந்தையான யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலைரூபன் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார். 


குறித்த நபர் விஸ்வமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக ஆழியவளை நோக்கிச்சென்றுகொண்டிருந்த போது பளை பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் ரக வாகனம் உழவு இயந்திரம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது முன்னாள் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. 


இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த கலைரூபன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்தில் பலியானவரின் மகன் இன்று (29) இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவராவார்.


விபத்தினை தொடர்ந்து ரிப்பர் சாரதி கிளிநொச்சி நோக்கி பயணித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ரிப்பர் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாழ் வடமராட்சி ஆழியவளை பகுதியை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு