05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாடு திரும்பியுள்ள குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள்

குவைத்தில் வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், இலங்கை தூதரகத்தில் பதிவுசெய்த 46 இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் 39 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் ஏனைய 7 ஆண்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த 46 பேரும் இன்று செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.



இவர்கள் அனைவரும் நீண்ட காலமாக வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளனர்.

இதேவேளை, நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் 2000 க்கும் அதிகமான வீட்டுப் பணியாளர்கள் பதிவு செய்துள்ளதாக தூதுவர் காண்டீபன் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




நாடு திரும்பியுள்ள குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 46 இலங்கையர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு