10,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

கடந்த 2009 ஆம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் பதின்நான்கு வயதுடைய சிறுமி ஒருவரை துன்பறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட குற்றவாளிக்கு நேற்று புதன்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கானது நேற்றைய தினம் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2009ம் ஆம் ஆண்டு 14 வயதுச் சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்றும், சிறுமியின் வாக்கு மூலம் மற்றும் சாட்சியங்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.



இவ்வாறு, குறித்த சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரணசிறைத்தண்டனையும் விதித்துள்ளதுடன், உடல், உள ரீதியாகவும் சமூகத்திலும் பாதிப்புக்களை சிறுமி எதிர்கொண்டுள்ளதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டினை வழங்குமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு